Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது? தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்.!

Siva
வியாழன், 25 ஜூலை 2024 (07:53 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை என்று பயணிகள் குற்றம் காட்டி வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டும் போதே, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றும் இந்த இரண்டும் இருந்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் எளிதாக சென்று வருவார்கள் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் குறித்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்என் சிங் அவர்கள் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும் என்றும் பேருந்து நிலையத்தை ஒட்டியே ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு முடித்ததும் ரயில்வே நிலையம் கட்டும் பணி தொடங்கும் என்றும் கண்டிப்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

10 கி.மீட்டருக்கும் மேல் இருந்தால் புதிய பொது தேர்வு மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு..!

வரலாறு காணாத சரிவில் இருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு.. முழு விவரங்கள்..!

சென்னையில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளம்.. இளம்பெண் தவறி விழுந்து பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments