Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது? தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்.!

Siva
வியாழன், 25 ஜூலை 2024 (07:53 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை என்று பயணிகள் குற்றம் காட்டி வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டும் போதே, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றும் இந்த இரண்டும் இருந்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் எளிதாக சென்று வருவார்கள் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் குறித்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்என் சிங் அவர்கள் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும் என்றும் பேருந்து நிலையத்தை ஒட்டியே ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு முடித்ததும் ரயில்வே நிலையம் கட்டும் பணி தொடங்கும் என்றும் கண்டிப்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments