பெண்ணின் வயிற்றில் மருத்துவ கருவிவைத்து தைத்த டாக்டர்.. முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:11 IST)
கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் டாக்டர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவ கருவியை வயிற்றிலேயே வைத்து தைத்தது பெரும் சர்ச்சையான நிலையில் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கேரள முதலமைச்சர் மினராய் விஜயன் அவர்களுக்கு வயநாடு தொகுதியில் எம்பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். 
 
சமீபத்தில் வயநாடு தொகுதிக்கு சென்று இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணை தான் சந்தித்ததாகவும் அவருடைய நிலைமை அறிந்து வேதனைப்பட்டதாகவும்  தனக்கு நீதி வேண்டும் என்று தன்னிடம் ஒரு மனு அந்த பெண் கொடுத்ததாகவும் ராகுல் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே ரெண்டு லட்சம் ரூபாய் வழங்கியபோதிலும்  கவன குறைவு காரணமாக அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இது குறித்து தாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.  
 
இந்த நிலையில் கவன குறைவாக செயல்பட்ட டாக்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மீது  நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments