Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வருகிறேன்: ராகுல் காந்தி டுவீட்

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (11:57 IST)
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான ராகுல்காந்தி இன்று தமிழகம் வர இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமின்றி இன்று மதுரை அருகே அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியையும் அவர் நேரில் கண்டுகளிக்க உள்ளதாகவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினையும் அவர் சந்தித்து பேச உள்ளதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தமிழகம் வரவேற்பதாகவும் அனைவருக்கும் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும், மதுரை ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க இன்று தமிழகம் வருகிறேன் என ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்
 
தமிழகத்தில் தேர்தல் விரைவில் வர இருப்பதை அடுத்து தேசிய தலைவர்களின் வருகை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் வருகையும் அதை நோக்கித்தான் என்று கூறப்படுகிறது 
 
இன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பது மட்டுமின்றி அரசியல் ரீதியான சில முடிவுகளை எடுப்பார் என்றும் குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் திமுக கூட்டணி குறித்தும் அவர் உறுதி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments