Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‛இந்தியா’ கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்.. என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (16:32 IST)
இந்தியா கூட்டணி நடத்தும் பேரணியில்  ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் தகவல் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது என்பதும் இதில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் தற்போது திடீரென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ,  ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்  கைதை கண்டித்து இந்தியா கூட்டணி நடத்தும் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இந்தியா கூட்டணியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்தியா கூட்டணி நடத்தும் முக்கிய பேரணியில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி கலந்து கொள்ள மாட்டார் என்ற அறிவிப்பு இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments