Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி.. காங்கிரஸின் பலே திட்டம்..!

Mahendran
புதன், 7 பிப்ரவரி 2024 (10:30 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் போட்டியிடவில்லை என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ராகுல் காந்தி புதுச்சேரியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி தான் பிரதமராக வேண்டும் என்று கடந்த தேர்தலின் போது அறிவித்த ஒரே தலைவர் ஸ்டாலின் என்ற நிலையில் இந்த முறை அவர் அறிவிக்காமல் இருப்பது இந்தியா கூட்டணியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகள் கொடுத்தால் கூட ஏற்றுக் கொள்ளப்படும் என சோனியா தரப்பில் இருந்து கூறியுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி புதுச்சேரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் முதல்வர் ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதை திமுக தரப்பு ஏற்றுக் கொண்டால் ராகுல் காந்தி புதுச்சேரியில் போட்டியிடுவது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இன்று பள்ளிகள் விடுமுறை எங்கே?

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments