Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி.. காங்கிரஸின் பலே திட்டம்..!

Mahendran
புதன், 7 பிப்ரவரி 2024 (10:30 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் போட்டியிடவில்லை என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ராகுல் காந்தி புதுச்சேரியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி தான் பிரதமராக வேண்டும் என்று கடந்த தேர்தலின் போது அறிவித்த ஒரே தலைவர் ஸ்டாலின் என்ற நிலையில் இந்த முறை அவர் அறிவிக்காமல் இருப்பது இந்தியா கூட்டணியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகள் கொடுத்தால் கூட ஏற்றுக் கொள்ளப்படும் என சோனியா தரப்பில் இருந்து கூறியுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி புதுச்சேரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் முதல்வர் ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதை திமுக தரப்பு ஏற்றுக் கொண்டால் ராகுல் காந்தி புதுச்சேரியில் போட்டியிடுவது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments