Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டை பார்க்க வரும் ராகுல் காந்தி! – ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:18 IST)
பொங்கல் நாட்களில் பிரபலமாக தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை காண காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.

பொங்கல் திருநாளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா பாதிப்புகள் இருப்பதால் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் மிகவும் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் அன்று நடைபெற உள்ளது. வழக்கமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வெளிநாடுகளிலிருந்து கூட பலர் வருகை புரிவார்கள். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பியுமான ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதேநாளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments