Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இருந்தால் தமிழனாகிவிட முடியுமா? - ரஜினியை விளாசிய ராதாரவி

Webdunia
திங்கள், 22 மே 2017 (15:38 IST)
தமிழ்நாட்டில் வசிப்பதால் மட்டும், நடிகர் ரஜினிகாந்த் தமிழனாகிவிட முடியாது என நடிகர் ராதாரவி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.


 

 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிப்பதுதான் தற்போது ஹாட் நியூஸ். சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், ரஜினியின் நீண்ட நாள் நண்பரான நடிகர் ராதாரவியிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராதாரவி “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி உறுதியான முடிவெடுக்க வேண்டும். அவர் நல்லவர். அவரை பத்திரிக்கைகள் சீண்டி கொண்டிருக்கின்றன. அவருக்கென ரசிகர் கூட்டம் இருக்கிறது. விஜயகாந்த் போல் அவரும் அரசியலில் இறங்கட்டும். அதை நான் வரவேற்கிறேன். 
 
44 வருடங்கள் தமிழ்நாட்டில்தான் வசித்து வருகிறேன். நான் ஒரு பச்சைத் தமிழன் என்கிறார் ரஜினி. வெள்ளைக்காரன் கூட 200 வருடங்கள் இந்தியாவில் இருந்தார்கள். அதற்காக அவர்களை இந்தியர்கள் என சொல்ல முடியுமா?. ரஜினி ஏன் பயப்பட வேண்டும்? நான் தெலுங்கன்தான் என தைரியமா சொல்வேன். அவர் தன்னை பச்சைத் தமிழன் என கூறுவதால்தான் அவரை எல்லோரும் விமர்சிக்கிறார்கள்” என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments