Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிறு ஊரடங்கால் கைமேல் பலன்; அப்படியே தொடரணும்! – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (11:31 IST)
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் பலன் கிடைத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிறு முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அம்மா உணவகம், மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் ஞாயிறு ஊரடங்கு குறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “ஞாயிறு ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்திருப்பதாய் உணர முடிகிறது. தொடர்ந்து மக்கள் மாஸ்க் அணிவதுடன், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments