Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழுங்கிய ஆட்டுக்குட்டியை துப்பிய மலைப்பாம்பு

விழுங்கிய ஆட்டுக்குட்டியை துப்பிய மலைப்பாம்பு
, சனி, 25 அக்டோபர் 2014 (11:43 IST)
தேனி அருகே ஆட்டுக்குட்டியை விழுங்கிக்கொண்டிருந்த மலைப்பாம்பு பொதுமக்களைப் பார்த்ததும் துப்பியது.

தேனி அருகே உள்ள உப்பார்பட்டி கிராமத்தில் செங்குளம் உள்ளது. செங்குளத்தின் அருகேயுள்ள பகுதியில் மேய்ந்து கொண்டு இருந்த ஆட்டை பெரிய மலைப்பாம்பு ஒன்று பிடித்து விழுங்க முயன்றது. பாதி ஆட்டினை விழுங்கிய நிலையில் குளத்தங்கரை பகுதியில் பாம்பு கிடந்தது.

 

 

ஆட்டை விழுங்கியபடி இருக்கும் மலைப்பாம்பு குறித்த தகவல் காட்டுத்தீயை போல கிராம மக்களிடையே பரவியது. மலைப்பாம்பை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கூடிய பொதுமக்கள் பாம்பை பார்த்ததும் அடிக்க முயன்றனர். இதனால் பாம்பு ஆட்டை விழுங்காமல் துப்பிவிட்டது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வனத்துறையினர் பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil