Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு கொள்ளளவை நெருங்கிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (12:32 IST)
வைகை அணை தனது முழு கொள்ளளவை நிரம்பியுள்ள நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது 
 
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 கன அடி என்ற நிலையில் தற்போது 69 கன அடி தண்ணீர் நிரம்பி விட்டது. இந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வைகை அணை கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதை அடுத்து தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை அபாயத்தை பொதுப்பணித்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது
 
வைகை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறி கொள்ளும்படி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடக்குமா?

த.வெ.க செயலி தயார்! உறுப்பினர் இணைப்பு தொடக்கம்! - விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சனாதன கருத்தியலை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.. கமல்ஹாசன் சந்திப்புக்கு பின் திருமாவளவன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments