Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு.. தனி சின்னத்தில் போட்டி என அறிவிப்பு..!

Mahendran
புதன், 20 மார்ச் 2024 (11:37 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் திமுக போட்டியிடும் 21 வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்

அதிமுக கூட்டணியில் அவருக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்

இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக கூட்டணியின் முதல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments