Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாத பௌர்ணமி; சதுரகிரி செல்ல அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:33 IST)
புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி காலத்தில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மாதத்தில் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷம் வருவதால் ஏராளமான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலையேறி சுந்தரமகாலிங்கம் கோவில் சென்று வழிபட பக்தர்களுக்கு வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலையேறி செல்லும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது, இரவில் கோவிலில் தங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு மலை ஏற காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments