Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாத பௌர்ணமி; சதுரகிரி செல்ல அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:33 IST)
புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி காலத்தில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மாதத்தில் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷம் வருவதால் ஏராளமான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலையேறி சுந்தரமகாலிங்கம் கோவில் சென்று வழிபட பக்தர்களுக்கு வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலையேறி செல்லும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது, இரவில் கோவிலில் தங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு மலை ஏற காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments