புரட்டாசி மாத பௌர்ணமி; சதுரகிரி செல்ல அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:33 IST)
புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி காலத்தில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மாதத்தில் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷம் வருவதால் ஏராளமான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலையேறி சுந்தரமகாலிங்கம் கோவில் சென்று வழிபட பக்தர்களுக்கு வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலையேறி செல்லும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது, இரவில் கோவிலில் தங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு மலை ஏற காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments