Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாத பௌர்ணமி; சதுரகிரி செல்ல அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:33 IST)
புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி காலத்தில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மாதத்தில் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷம் வருவதால் ஏராளமான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலையேறி சுந்தரமகாலிங்கம் கோவில் சென்று வழிபட பக்தர்களுக்கு வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலையேறி செல்லும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது, இரவில் கோவிலில் தங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு மலை ஏற காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடக்குமா?

த.வெ.க செயலி தயார்! உறுப்பினர் இணைப்பு தொடக்கம்! - விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சனாதன கருத்தியலை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.. கமல்ஹாசன் சந்திப்புக்கு பின் திருமாவளவன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments