Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் சகோதரர் சுயேட்சையாக போட்டி: பஞ்சாப் காங்கிரஸில் படு குழப்பம்!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:34 IST)
பஞ்சாப் முதல்வரின் சகோதரருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.யை 
 
உத்தரப்பிரதேசம் பஞ்சாப் கோவா உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு காங்கிரஸ் பிஜேபி உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியான நிலையில் அந்த அறிவிப்பில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் அவர்களின் சகோதரர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப் பட்டதாக தெரிகிறது
 
இதனை அடுத்து ஆத்திரமடைந்த அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் பஞ்சாப் மாநில காங்கிரசில் கடும் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கும் காங்கிரசுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெறுவாரா விஜய பிரபாகரன்..? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தேர்தலில் அதிமுக வாஷ் அவுட்..! இரட்டை இலக்கில் பாஜக..! ஷாக் எக்சிட் போல் முடிவு..!!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தோல்வி.? கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி..!!

Exit Poll 2024 Live: இந்தியாவில் ஆட்சியமைக்கப்போவது யார்? மீண்டும் பாஜகவா? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments