Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகிறார்கள் - புகழேந்தி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (16:48 IST)
பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருவதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

 
தமிழகத்தில் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவடைய போகிறது என்று டிடிவி தினகரன் வெகு நாட்களாக தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
தமிழகத்தில் ஆட்சி விரைவில் முடியப்போகிறது. அதிமுகவை அழிக்க நினைக்கும் மோடியை நம்பி தமிழக அமைச்சர்கள் ஏமாறுகின்றனர். பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகின்றனர். 
 
எங்கள் கைக்கு விரைவில் கட்சியும், ஆட்சியும் திரும்ப கிடைக்கும். தமிழக எம்.எல்.ஏ.க்களில் 60 முதல் 70 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு முழு கட்சியும் எங்களிடம் வந்துவிடும். இதனால் புதிய கட்சி தொடங்குவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments