Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகிறார்கள் - புகழேந்தி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (16:48 IST)
பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருவதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

 
தமிழகத்தில் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவடைய போகிறது என்று டிடிவி தினகரன் வெகு நாட்களாக தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
தமிழகத்தில் ஆட்சி விரைவில் முடியப்போகிறது. அதிமுகவை அழிக்க நினைக்கும் மோடியை நம்பி தமிழக அமைச்சர்கள் ஏமாறுகின்றனர். பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகின்றனர். 
 
எங்கள் கைக்கு விரைவில் கட்சியும், ஆட்சியும் திரும்ப கிடைக்கும். தமிழக எம்.எல்.ஏ.க்களில் 60 முதல் 70 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு முழு கட்சியும் எங்களிடம் வந்துவிடும். இதனால் புதிய கட்சி தொடங்குவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments