Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் வரட்டும்; அதோட தினகரன் ஆட்டம் க்ளோஸ்... புகழேந்தி ஆன் ஃபயர்!

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (11:13 IST)
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கின்ற பெயரில் இயங்கும் கம்பெனி முழுவதுமாக கலைக்கப்படும் என  புகழேந்தி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீப காலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசி வந்த செய்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. மேலும் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடியின் வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார் புகழேந்தி.
 
அப்பொழுதே புகழேந்தி அதிமுகவில் இணையப்போகிறார்? என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அது நட்பு ரீதியான சந்திப்பு என புகழேந்தி விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது வெளிப்படையாகவே, அதிமுகவில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார். 
இது குறித்தி புகழேந்தி பேசியதாவது, தினகரன் கட்சி துவங்கி 2 வருடங்களாகியும் கட்சி என்கிற அங்கீகாரத்தை பெற முடியாமல் திணறி வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் அமமுகவினரை சுயேச்சைகளாக போட்டியிட வைத்து தோல்வியடைய செய்தார்.
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கின்ற பெயரில் இயங்கி வரும் கம்பெனியை முழுவதுமாக கலைக்க வேண்டும். அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழகம் திரும்பியதும், நான் அதிமுகவில் இணைவேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments