Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 மாத கர்ப்பிணிப் பெண் தீக்குளித்து தற்கொலை

5 மாத கர்ப்பிணிப் பெண் தீக்குளித்து தற்கொலை
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (12:24 IST)
புதுக்கோட்டையில் 5 மாதம் கர்ப்பிணியாக இருந்தப் பெண்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
புதுக்கோட்டை, காமராஜபுரம் 25 ஆவது வீதியைச்சேர்ந்த மளிகைக்கடைக்காரர் அய்யாச்சாமி என்பவரது மனைவி, 33 வயதுடைய பாலாதேவி.
 
அய்யாச்சாமிக்கும் பாலாதேவிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பாலாதேவி 5 மாதகர்ப்பிணியாக இந்தார். 
 
இந்நிலையில், அதிகாலையில் வீட்டில் தனிமையில் இருந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் பலத்த தீக்காயங்களுடன் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை, கணேஷ் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அதிகாலையில் கர்ப்பிணிப் பெண் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட, இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil