Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வர மறுத்த எதிர்கட்சிகள்: புதுவையில் அடுத்து என்ன?

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (08:01 IST)
புதுவையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அவர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த நிலையில் இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
இதனையடுத்து புதுவையில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டது. குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம் என்ற அதிரடியான காரணத்தோடு இதனி எதிர்கட்சி தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கும் என்ற நிலையில் அதுவரை குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக 1991 ஆம் ஆண்டு புதுச்சேரியில் திமுக ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு பிறகு 30 ஆண்டுகள் கழித்து இப்போது காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments