Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ.. புதுவை சபாநாயகர் கருத்தால் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 26 ஜனவரி 2025 (09:30 IST)
தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ மாதிரி இருப்பார்கள் என புதுவை மாநில சபாநாயகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில், அவர் பேசிய கருத்து மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களின் மனநிலை வித்தியாசமாக இருக்கும் என்றும், தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போல் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்து முடித்து விடுவார்கள். அதேபோல், 11ஆம் வகுப்பு படிக்கும் போது 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்து விடுவார்கள்.

இந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலை மாறிவிடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருந்தாலும், உடல் மன ரீதியாக, மன ரீதியாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

தனியார் பள்ளி மாணவர்கள் குறித்து சபாநாயகர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments