Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படும் கிரண் பேடி: ஆளுநரை திரும்ப பெற மத்திய அரசுக்கு கோரிக்கை!

பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படும் கிரண் பேடி: ஆளுநரை திரும்ப பெற மத்திய அரசுக்கு கோரிக்கை!

பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படும் கிரண் பேடி: ஆளுநரை திரும்ப பெற மத்திய அரசுக்கு கோரிக்கை!
, புதன், 25 ஜனவரி 2017 (16:09 IST)
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசி அந்த நிகழ்ச்சியிலேயே நடிகர் ஆர்ஜே பாலாஜி அவருக்கு பதிலடி கொடுத்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது.


 
 
இதனையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் புதுச்சேரியில் கிரண் பேடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கிரண் பேடி எடுத்த நடவடிக்கை ஒன்று மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
 
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யாணை அங்கு காங்கிரீட் தரையில் நிற்க விடப்பட்டுள்ளதாகவும், மேலும் அது சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ளதால் அதனை காட்டில் விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு கிரண் பேடியிடம் புகார் மனு அளித்தது.
 
இதனையடுத்து பீட்டாவின் புகார் மனுவுக்கு நடவடிக்கை எடுத்த ஆளுநர் கிரண் பேடி உடனடியாக மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கிரண் பேடிக்கு புதுச்சேரியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக புதுச்செரி ஆளுநர் கிரண் பேடி செயல்படுவதால் மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிருத் ஆபாச படம்: விளக்கம் அளித்த பின்னரும் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!