Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை முதல்வருக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
திங்கள், 10 மே 2021 (06:05 IST)
புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் புதுவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அப்பாவி மக்களுக்கு மட்டுமன்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பி க்கள் மத்திய அமைச்சர்கள் முதல்வர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பரிசோதனையை மேற்கொண்ட ரங்கசாமிக்கு இன்று கொரோனா தொட்டு உறுதியானது.
 
இதனை அடுத்து சிகிச்சைக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments