Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு

காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு
, திங்கள், 20 அக்டோபர் 2014 (18:19 IST)
அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
பிரகாஷ்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காவல் நிலைய உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு கேமரா அவசியம் என்று கூறியுள்ளார்.
 
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அரசிடம் விளக்கம் பெற வேண்டியுள்ளது என்றனர்.
 
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil