Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாதத்திற்கு பிறகு... தமிழக மற்றும் சென்னை வாசிகள் ஹேப்பி அண்ணாச்சி!!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (08:04 IST)
கொரோனா காரணமாக 5 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பேருந்து, பயணிகள் ரயில், மெட்ரோ ரயில் சேவை துவங்கியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகம் முழுவதும் பேருந்து இரயில்களில் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஓரளவு தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் ஓடியது. 
 
இந்நிலையில் இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்  பேருந்து, மெட்ரோ ரயில், பயணிகள் ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது. ஆம், சென்னை சென்ட்ரலில் இருந்து  ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.10 மணி முதல் ரயில் சேவை துவங்கியது. 
 
அதேபோல, விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீலநிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது, இதனை துவங்கி வைத்த அமைச்சர் எம்.சி.சம்பத் பயணிகளுடன் பயணித்தார். 
 
இதுமட்டுமின்றி சென்னையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று மட்டும் 400 பேருந்துகள் இயங்கவுள்ளது. 50% பேருந்து நிறம்பியதும் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments