Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடிய மதுக்கடையை மீண்டும் திறந்ததால் பொது மக்கள் முற்றுகை

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (13:27 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுக்கடைகளை மூடக்கோரி பொது மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் பல அசம்பாவித சம்பவங்களும் நடந்தன. மதுவிலக்கு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் இளங்கோவனின் சர்ச்சைக்குரிய பேச்சால் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மதுவிலக்கு போராட்டம் சிறிது காலம் ஓய்ந்திருந்தது.

இந்நிலையில் மதுவிலக்கு போராட்டத்தால் மூடிய கடையை அரசு மீண்டும் திறந்ததால் ராமேஸ்வரத்தில் நேற்று பொதுமக்கள் அந்த கடை முன்பு முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டனர்
ராமேஸ்வரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கிராமத்தில் மூடிய மதுக்கடையை மீண்டும் நேற்று திறந்ததால் பொது மக்கள் கடை முன்பு கூடி கடையை மூடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த கடையின் அருகில் கோவில் மற்றும் பள்ளிக்கூடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments