தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டும் எதிர்கட்சியினர்

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (15:54 IST)
கோப்புப்படம்

தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என எதிர்கட்சியினர் அதிமுக அரசை பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் இந்த பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை  உண்டு செய்யும் என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து எதிர்கட்சியினர் இதனை வரவேற்றுள்ளனர். பொதுத் தேர்வு ரத்து குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், ”5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அறிவித்து தேவையில்லாத பதற்றத்தை அரசு உருவாக்காமல் இருந்திருக்கலாம், தேர்வை ரத்து செய்தது வரவேற்க்கத்தக்கது” என கூறியுள்ளார்.

அதே போல் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த எம்.பி. ரவிக்குமார், ”பொதுமக்களின் அழுத்தம், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, தமிழக அரசு 5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது வரவேற்கத்தத்க்கது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments