Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகள்?

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:05 IST)
இன்று பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில் ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் தகவல்.

 
தமிழ்நாடு முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பிற்கும், நாளை 10 ஆம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம், வினாத்தாள் அறைகளுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆம், தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 3,91,343 மாணவர்களும் 4,31,341 மாணவிகளும் எழுதுகின்றனர்.
 
இதனிடையே சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைரியமாக தேர்வு எழுதுமாறு மாணவர்களை வாழ்த்தியதாகவும் ஜூலைக்குள் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்மொழி மட்டுமல்ல, 10 மொழிகளை மாணவர்களுக்கு ஊக்குவிப்பேன்: சந்திரபாபு நாயுடு..!

பிளஸ் 1 தேர்விலும் தமிழ் பாடத்தை எழுத வராத மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி.. பிரிட்டனில் பரபரப்பு...!

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆபாச வீடியோ டவுன்லோடு செய்தால் 10 ஆண்டுகள் சிறை.. சென்னை போலீஸ் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments