Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகள்?

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:05 IST)
இன்று பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில் ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் தகவல்.

 
தமிழ்நாடு முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பிற்கும், நாளை 10 ஆம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம், வினாத்தாள் அறைகளுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆம், தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 3,91,343 மாணவர்களும் 4,31,341 மாணவிகளும் எழுதுகின்றனர்.
 
இதனிடையே சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைரியமாக தேர்வு எழுதுமாறு மாணவர்களை வாழ்த்தியதாகவும் ஜூலைக்குள் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்.! தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு.!

தமிழகத்தில் மதுவிலக்கை உடனே அமல்படுத்துக.! ராமதாஸ் வலியுறுத்தல்...!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments