Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் என்னாச்சு?? – நிதியமைச்சர் பதில்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (12:35 IST)
தமிழக அரசு ஆண்டு பட்ஜெட் அறிவிப்பு முடிந்துள்ள நிலையில் மகளிருக்கு மாதம்தோறும் நிதியுதவி திட்டம் பற்றி நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார்.

கல்வி, விவசாயம், சுகாதாரம், மருத்துவம் என பல துறைகளுக்கும் நிதி ஒதுக்கியும், பல புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும் பட்ஜெட் உரை இருந்தது. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது.

இந்த பட்ஜெட் தாக்கலில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத்தின் நிதிநிலை மெல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும், நிதிநிலை மேம்பட்ட பின் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments