Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு. க. ஸ்டாலின் மக்களை தூண்டிவிடுகிறார் - அமைச்சர் விமர்சனம் !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (21:18 IST)
மத்திய பாஜக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு எங்கிலும் பலத்த போராட்டங்கள் எழுந்தன. அப்போது பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன.
இந்நிலையில்,  தமிழக எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று பேரணி நடத்தப்பட்டது.
 
இந்நிலையில்,  குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதுபோல் மக்களை தூண்டிவிடுவதாக ஸ்டாலின் மீது  அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள்  சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்குப் பயந்து கொண்டுதான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாகவும் விமர்சனம் செய்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments