Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (11:26 IST)
அக்னிபத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது. 

 
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான அக்னிபாத் திட்டம் மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18 வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 
 
வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.
 
இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 21 வரை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவத்தில் இருந்தபடியே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
ஆம், பீகார் மாநிலம் முங்கர், ஜெஹானாபாத் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளானர். இதே போல தமிழகத்தில் வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிராக 100-க்கும் மேற்குபட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments