Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: பதட்டத்தில் சென்னை!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (10:28 IST)
தமிழகம் முழுவதும் இன்றுடன் ஏழாவது நாளாக மாணவர்கள் போரடி வருகின்றனர். தமிழக அரசு அவசர சட்டம் ஏற்படுத்தியும்  மாணவர்கள் அதனை ஏற்காமல் நிரந்தர சட்டம் வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 
மாணவர்கள் கோரிக்கை நிறிவேறியது எனக்கூறிய போலீஸார் மாணவகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும்  போலீசாரின் கோரிக்கையை மாணவர்கள் ஏற்க அரை நாள் அவகாசம் கேட்ட நிலையில், அதனை ஏற்க போலீசார் மறுத்து  விட்டனர்.
 
இந்நிலையை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் தடுப்புகள் வைத்து காவல்துறையினர் அடைத்தனர்.
 
தடுப்புகளை மீறி போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த போராட்டக்காரர்கள் மீது அவ்வை சண்முகம் சாலையில்  காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால், அவ்வை சண்முகம் சாலை உட்பட மெரினாவை சுற்றி பதற்றம்  நிலவுகிறது. மேலும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால், கோபம் கொண்டு கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீஸ்  அதிகாதியின் மீது கல் பட்டு காயம் ஏற்ப்பட்டதால், போலிஸாரும், கண்ணீர் புகை குண்டு, கல் வீசி தாக்குதலை ஏற்படுத்தி  வருகின்றனர். இதனால் அவ்வை சண்முகம் சாலை,  சென்னை மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments