Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அரசை கண்டித்து ஜூன் 25-ல் போராட்டம்..! தேமுதிக அறிவிப்பு..!

Senthil Velan
வெள்ளி, 21 ஜூன் 2024 (12:45 IST)
திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் ஜூன் 25ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு திமுக அரசே காரணம் என்றும் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியதோடு, கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

ALSO READ: பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்..! கள்ளக்குறிச்சிக்கு செல்லுங்கள்..!! நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
 
இந்நிலையில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து ஜூன் 25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வன்கொடுமை, 15 படுகொலை.. தமிழ்நாட்டையே அலறவிட்ட சைக்கோ சங்கர்! - எப்படி செத்தான் தெரியுமா?

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!

பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா? அண்ணாமலை ஆவேசம்..!

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர்.. உயிரிழந்ததாக அறிவிப்பு..!

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments