அனுமதி மறுக்கப்பட்டும் நடந்த ஆர்ப்பாட்டம்! நாம் தமிழர் கட்சியினர் கைது! சென்னையில் பரபரப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (10:58 IST)

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு திமுகவை கண்டித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்துவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதை மீறி இன்று நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!

காதலி, மனைவி இருவரையும் கொன்று ஒரே இடத்தில் புதைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments