Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட 400 பேர் கைது

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2014 (14:32 IST)
கொழும்பு நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.
 
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, த.தே.பொ.க. மணியரசன், தோழர். தியாகு உள்பட சுமார் 300 பேர் இலங்கை தூதரகத்தை நோக்கி ஆவேசம் பொங்க முழக்கமிட்டு முற்றுகையிடச் சென்றனர்.
 
காவல்துறையினர் அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது திடீரென தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இலங்கை நாட்டு கொடியையும் தீ வைத்து கொளுத்தினார்கள்.
 
இதைப் பார்த்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் 400 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் அனைவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!