Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் அடைத்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்

வீட்டில் அடைத்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்
, புதன், 25 மார்ச் 2015 (09:14 IST)
வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட விருதுநகர் பெண்ணை காவல்துறையினர் மீட்கப்பட்டடுள்ளார்.
 
விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண் திருமணமாகி கணவருடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்துவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி திடீரென அவர் காணாமல் போனார். 
 
இது குறித்து சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல்போன இளம் பெண்ணை தேடிவந் தனர்.
 
இந்நிலையில் காணாமல் போன இளம்பெண்ணின் செல்போன் சிக்னல்களை காவல்துறையினர் கண் காணித்தனர். அப்போது கோவில்பட்டியில் இருந்தது செல்போன் சிக்னல் வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிடம், காணாமல்போன விருதுநகர் பெண்ணின் செல்போன் இருந்தது.
 
இதையடுத்து அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
 
மாயமான விருதுநகர் பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பே தூத்துகுடியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்துள்ளது. அவரைப் பார்ப்பதற்காகவே கடந்த மாதம் 15 ஆம் தேதி வீட்டில் இருந்து 5 பவுன் நகையுடன் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
 
ஆனால் அவரால் தனது காதலனைச் சந்திக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விருதுநகர் பெண் கோவில்பட்டி வந்துள்ளார். அங்கு ஒரு முதியவரைச் சந்தித்து வேலை கேட்டுள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரிடம் இந்தப் பெண்ணை ஒப்படைத்துள்ளார்.
 
அந்தப் பெண்ணை பாண்டி அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய மாரியம்மாள், மற்றும் 55 வயதுடைய அந்தோணிராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பார்வதி என்ற பெண்ணிடம் ஒப்ப டைத்துள்ளனர். அந்த பார்வதி வீட்டில் அடைத்து வைத்து அந்த இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
 
அத்துடன், அவரிடம் இருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார். சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை கோவையில் ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சேர்த்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கோவையில் இருந்த விருதுநகர் பெண்ணை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுள்ளனர்.
 
வேலை கேட்டுவந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அந்தோணிராஜ், மாரியம்மாள் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகவுள்ள பாண்டி மற்றும் பார்வதியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil