Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது கடையை மூடக்கோரி கோவிலம்பாக்கத்தில் போராட்டம்: காவல்துறையினர் தடியடி

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (10:37 IST)
சென்னை கோவிலம்பாக்கத்தில் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர் அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
 
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி இன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அதன்படி, சென்னை கோவிலம்பாக்கத்தில் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர் போராட்டம் நடத்தினர்.
 
அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர்.
 
பின்னர், போராட்டம்  நடத்தியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments