Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (08:32 IST)
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ஆகஸ்டு 4 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பை ஆதரிப்பதெனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள் மரணத்தில் சந்தேகங்களும், மர்மங்களும் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
 
இந்தச் சந்தேகங்களைப் போக்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. உயிர் நீத்த சசி பெருமாளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிற வகையில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கைப் பதிவு செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
 
இந்தச் சம்பவத்திற்குத் தமிழக அரசுதான் முழுப்பொறுப்பாகும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆகஸ்டு 4 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பை ஆதரிப்பதெனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.
 
இதேபோன்று, முழு அடைப்பு போராட்டத்திற்கு தேமுதிகவும் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments