Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய்வசந்துக்காக பிரச்சாரத்திற்கு வரும் பிரியங்கா காந்தி!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (16:45 IST)
தமிழகம் இதுவரை பல தேர்தல்களில் சந்தித்து இருந்தாலும் இதுவரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மட்டுமே பிரச்சாரத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் முதல் முறையாக பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் சட்டமன்ற தேர்தலுடன் நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மார்ச் 27ஆம் தேதி பிரியங்கா காந்தி கன்னியாகுமரி வரவிருப்பதாகவு, அங்கு நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் பிரியங்கா காந்தியின் வருகைக்குப் பின் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments