Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க ரெடி- நீங்க ரெடியா? கல்விக் கொள்ளைக்கு எதிராக தமிழக அரசு

நாங்க ரெடி- நீங்க ரெடியா? கல்விக் கொள்ளைக்கு எதிராக தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (14:30 IST)
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வந்துள்ளது.
 

 
தமிழகம் முழுவதும் தனியாருக்கு சொந்தமாக பள்ளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவைகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
 
பெரும்பாலான பள்ளிகள் அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலித்து வருகிறது. வசூலிக்கும் கொள்ளைக் கட்டணத்திற்கு ரசீதுகள் கொடுப்பதில்லை. இது குறித்த புகார்கள் தமிழக அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது.
 
இந்த நிலையில், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்த புகாரை, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அலுவலம், டிபிஐ வளாகம், கல்லூரிச்சாலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு எழுத்துபூர்வமாக புகார் அளிக்கலாம். மேலும், 044 - 28 27 01 69 என்ற எண்ணிற்கும், 044 - 28 25 11 08 என்ற ஃபேக்ஸ் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
 
இவ்வாறு பொது மக்கள் தெரிவிக்கும் புகாருக்கு உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் தயராக உள்ளனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments