Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தர்மபுரியில் தனியார் பள்ளி மாணவி 4 இளைஞர்களுடன் உல்லாசம்

தர்மபுரியில் தனியார் பள்ளி மாணவி 4 இளைஞர்களுடன் உல்லாசம்
, வெள்ளி, 5 டிசம்பர் 2014 (16:06 IST)
தர்மபுரியில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் இளைஞர்களுடன் நான்கு பேருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
 
தர்மபுரி பாரதி புரத்தையொட்டி சேலம் – பெங்களூர் ரெயில்வே பாதை உள்ளது. இப்பகுதியில் 500க்கும் குடியிருப்புகள் உள்ளன. இந்த ரெயில்வே பாதையை ஒட்டி மின் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த பகுதியில் அடிக்கடி சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் பள்ளி மாணவி ஒருவர் இருள் சூழ்ந்த அந்த ரெயில்வே தண்டவாளப் பகுதியில் நடந்துச் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து 4 வாலிபர்கள் சென்றனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
 
அப்போது பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்களும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு மாணவியுடன் உல்லாசமாக இருந்த 4 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
 
இதனையடுத்து பொதுமக்கள் பள்ளி மாணவியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், தனியார் பள்ளியில் படித்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் மாணவிக்கு அறிவுரை கூறி அவளது வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil