Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனியாமூர் பள்ளிக்கு தீ: 1500 மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், டிசி தீயில் சேதம்!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (08:04 IST)
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உள்பட 1500க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் தீயில் எரிந்து நாசமான தகவல் வெளியாகியுள்ளது
 
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பள்ளி வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் பள்ளியில் உள்ள முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையிலும் தீ வைக்கப்பட்டது.
 
இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் தீயில் எரிந்து நாசமானதாக தெரிகிறது. குறிப்பாக இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிப்பெண் சான்றிதழ்களும் தீயில் எரிந்து சாம்பலான தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments