Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே – உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ராமதாஸ்!!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (14:50 IST)
கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே – உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ராமதாஸ்!!

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா நோய்த் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றைத் தடுக்க  7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்ற கவிதைகளை 6 வார பரோல் அல்லது ஜாமீனில் விட உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து,  பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை 6 வார பரோல் அல்லது ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே என்ற பார்வை உன்னதமானது! #CoronaVirus #LockDownTNnow என உச்ச நீதிமன்றத்தின் ஆணையை வரவேற்றுள்ளார். 

மேலும், அவர், தனது மற்றோரு டுவிட்டர் பதிவில், கொரோனா நோயால் ஒருவர் கூட தமிழகத்தில் உயிரிழக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் விருப்பம் ஆகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது தான். ஆனால், உடனடியாக 3 வார முழு அடைப்பை அறிவித்தால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும்! #CoronaVirus #LockDownTNnow என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments