Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (09:34 IST)
புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வரவிருக்கின்றதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதுடன், பிரதமர் மோடி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய உள்ளதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில், மதியம் 3.30க்கு வழக்கம்போல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
நாளை ராமேஸ்வரம் வர இருக்கும் பிரதமர் மோடி, புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments