Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரார்தனை என்று கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்

Webdunia
புதன், 22 ஜூலை 2015 (17:06 IST)
தனிமையில் பிரார்தனை செய்ய வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஜான் என்பவர் பாதிரியாராக வருகிறார்.
 
அவர், தான் அந்த சபைக்கு அடிக்கடி சென்று வரும்போது பாதிரியார் ஜான் ஒருநாள், தன்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்த வேண்டும் எனக்கூறி மிரட்டி கற்பழித்து விட்டார். மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார் என்றும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், பாதிரியார் ஜானை விசாரணைக்கு வரும்படி அழைத்தபோது, அவரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஜானுடன் வந்தவர்களை வெளியே செல்லும்படி காவல் துறையினர் கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிரியார் ஜான் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
 
இதில் காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற காவல் துறையினர் பாதிரியார் ஜானை மடக்கி பிடித்தனர். பிறகு பாதிரியார் ஜானை போலீசார் கைது செய்து நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!