Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பானர்ஜி முழுமையாக பேசவிடாமல் தடுப்பதா.? பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

Senthil Velan
சனி, 27 ஜூலை 2024 (14:32 IST)
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  
 
டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்  நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி, இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். 
 
மம்தா வெளிநடப்பு:
 
ஆனால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே அவர் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் என்னை பேச விடவில்லை எனவும் குற்றம் சாட்டினார். 
 
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்:
 
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இப்படியா நடத்துவதா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
எதிர்க்கட்சிகளை எதிரிகள் போல் ஒடுக்க நினைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை ஒன்றிய அரசு புரிந்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ALSO READ: அரசுப் பணியில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு.! பாஜக ஆளும் மாநிலங்கள் அறிவிப்பு..!!
 
இதுதான் கூட்டாட்சி தத்துவமா?. சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடம் பேச அனுமதித்து விட்டு, தனக்கு 5 நிமிடமே தரப்பட்டதாக மம்தா கூறியதை சுட்டிக் காட்டி முதல்வர்  ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments