Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுத்தி பிடிக்கும் காங்., பிடி கொடுக்காத திமுக!? – பிப்ரவரி 9ல் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!

Prasanth Karthick
திங்கள், 29 ஜனவரி 2024 (13:00 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில கட்சிகள், மத்திய எதிர்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் மிகப்பெரும் கனவோடு I.N.D.I.A கூட்டணியை அமைத்தது. ஆனால் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அரவிந்த கெஜ்ரிவால் என அடுத்தடுத்து கூட்டணியில் இருந்தோர் காங்கிரஸ் இல்லாமல் தனித்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்து வருவது காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் காங்கிரஸுக்கான ஆதரவு கூட்டணியில் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சியில் இல்லாதபோதே பெரும்பான்மை தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டியது. தற்போது திமுக ஆட்சியில் உள்ளதால் ஆதரவு முன்பை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: பட்டமளிப்பு விழா.. புறக்கணித்த அமைச்சர்.! ஆளுநர் பங்கேற்பு.!!

இந்நிலையில் திமுகவுடனான கூட்டணியில் சீட்டுகள் ஒதுக்குவது குறித்த விவாதம் நேற்று அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தலைமை சொல்லி அனுப்பிய இரண்டு இலக்கங்களில் சீட்டை கேட்டு பெறுவது என்ற நோக்குடன் டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்ஸ்வானிக், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி உடைந்துள்ளதை காட்டி திமுக தரப்பில் தொகுதிகள் ஒதுக்குவதில் கணிசமான அளவு குறைவாகவே டீல் பேசியதாக கூறப்படுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முந்தைய தேர்தலின் வெற்றிகள் மற்றும் நடப்பு தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் இதில் டெல்லி தலைமையிலிரிந்து யாரும் கலந்து கொள்ளாமல் மாநில நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டு ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments