Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று சென்னை வருகிறார் ஜனாதிபதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (07:15 IST)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று சென்னை வர இருப்பதை அடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளனர்
 
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று சென்னை வருகிறார். இதற்காக போலீசார் நேற்று காலை முதலே தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் 5 அடுக்கு பாதுகாப்பு சென்னை சட்டசபை வளாகத்தில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிவிரைவு படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து ராஜ்பவன் வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு குடியரசு தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஊட்டி செல்ல வருகிறார் என்பதை அடுத்து ஊட்டியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments