Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் உடனே விடுதலை செய்ய வைகோ கோரிக்கை

சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் உடனே விடுதலை செய்ய வைகோ கோரிக்கை
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (22:38 IST)
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. 


 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
'சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்திடம் நியாயமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
 
சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த 95 ஆண்டு காலமாக ஜனநாயக முறைப்படி மாணவர் பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தேர்தலின் போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு தேர்தலை நடத்துவது இல்லை என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
இதனால், மெரினா கடற்கரை சாலையில் கண்ணகி சிலை அருகே மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் சாலை மறியல் செய்துள்ளனர்.
 
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தாமல், திடீரென்று தடியடி நடத்தி அவர்களை ஓடஓடவிரட்டியுள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில், மதுக் கடையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் மீதும் இதே போல காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. தற்போதும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
 
ஜெயலலிதா அரசு தமிழக மாணவர்களை அச்சுறுத்தவே இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அரசின் இந்த அணுகுமுறைக்கு கண்டனத்திற்குரியது.
 
எனவே, கைது செய்யப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil