Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: அதிமுகவை எச்சரித்த பிரேமலதா!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (16:33 IST)
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுகவை எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுக தலைமை தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை
 
அதேபோல் திமுகவும் தேமுதிகவுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அதிமுக தலைமையை கடந்த சில நாட்களாக பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்
 
அந்த வகையில் தற்போது அவர் பேசியபோது ’234 தொகுதிகளிலும் நமக்கு வேட்பாளர்கள் உள்ளனர். கூட்டணி தர்மத்துக்காக பொறுமை காக்கின்றோம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிமுகவை கூறியுள்ளார். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிக கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை” - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments