பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் 'மீ டு' எப்படி வரும்: பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (13:28 IST)
'மீ டு' இயக்கம் மூலம் இந்தியா முழுவதும் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார்கள். பல ஆண்டுகாலமாக வெளியில் சொல்லாமல் இருந்த பெண்கள், 'மீ டு' இயக்கம் மூலம் தைரியமாக தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 
#MeToo ஹேஸ்டாக் மூலம் நடிகை தனுஸ்ரீ தத்தா, கங்கனா ரணாவத், சின்மயி, லீனா மணிமேகலை, சுருதி ஹரிகரன் உள்பட பலர் பாலியல் புகார் எழுப்பிவருகிறார்கள். இதற்கு ஆதரவும் எதிர்ப்பு இருக்கிறது. இந்த விவகாரத்தில் நானே படேகர், அர்ஜுன், வைரமுத்து உள்பட பல பெரும் தலைகள் சிக்கியுள்ளனர்.
 
சிலர் 'மீ டு' இயக்கம் மூலம் ஆதாரம் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், தேமுதிக பொருளாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரேமலதா விஜயகாந்த், ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் #MeToo எப்படி வரும்? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்