அமலாக்கத்துறை முதலில், துரைமுருகன் வீட்டுக்குத்தான் ரெய்டு போக வேண்டும்.. பிரேமலதா ஆவேசம்..!

Siva
புதன், 3 ஏப்ரல் 2024 (08:58 IST)
அமலாக்கத்துறை முதலில் அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு தான் ரெய்டு சென்றிருக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று பிரச்சாரம் செய்தார். அங்கு அவர் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது இந்த தொகுதியின் எம்பி ஆக இருந்த கதிர் ஆனந்த் ஒரு முறையாவது தொகுதி பக்கம் வந்து மக்களை பார்த்திருக்கிறாரா? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறாரா?

அதுமட்டுமின்றி அவர் ஒரு உளறுவாயராக இருக்கிறார், பெண்களை மதிக்காமல் கேலி செய்கிறார், ஒட்டுமொத்த பெண்களும் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அமலாக்கத்துறையினர் எங்கெங்கோ ரெய்டு செய்து வருகிறார்கள், முதலில் அவர்கள் அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு தான் ரெய்டு போயிருக்க வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து மக்களின் வரிப்பணத்தை காப்பாற்ற வேண்டியது மிக மிக முக்கியம் என்றும் பிரேமலதா பேசினார்

மேலும் லாட்டரி, கஞ்சா, மது விற்பனை செய்பவர்கள் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், லாட்டரி , கஞ்சா விற்பவர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments